புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், அதே ஊரைச் சேர்ந்த 3 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, செவ்வாய்க்கிழமையும் ஊரில் திரண்ட அந்த மக்கள் கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.