மயிலாடுதுறை, ஜூலை 9 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங் காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத் தில், குடியிருக்க இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி யைச் சேர்ந்த பட்டியலின மக்கள் நடத்தி வரும் போராட்டம் 4 ஆவது நாளை எட்டி யது. ஏகோஜிமகாராஜபுரம், மேலத்தெருவில் வசிக்கும் பட்டியலின மக்கள் சிறிய அளவி லான காலனி வீடுகளில் கடும் நெருக்கடி யான இடத்தில் வசித்து வருகின்றனர். இத னால் கடந்த பல ஆண்டுகளாக குடியிருக்க இடம் கேட்டு, அரசுத் துறை அதிகாரிகளி டம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதே பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 45 குடும்பங் களுக்கு பிரித்து தர வேண்டுமென்ற கோரிக் கையை முன்வைத்து, அந்த இடத்தில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தை சனிக்கிழமை முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலை மையில் இரவு, பகலாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலா ளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், வாலிபர், மாதர் சங்கத்தினர் உட்பட 300- க்கும் மேற்பட்டோர் 4 ஆவது நாளாக செவ்வாயன்றும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.