கும்பகோணம், அக்.23- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திகோ சில்க்ஸ் என்று அழைக்கப்படும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 1975 நெசவா ளர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். அங்கத்தினர்களுக்கு (நெசவாளர் களுக்கு) கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகக் குறைவாக தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து செவ்வாயன்று திகோ சில்க்ஸ் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில், கைத்தறி நெசவாளர்களுக்கு கடந் தாண்டை போலவே போனசாக 38 சதவீத மும் ஈவுத்தொகையாக 14 சதவீதமும் வழங்க வேண்டும் என காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, திருவிடைமருதூர் சட்ட மன்ற உறுப்பினரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் மற்றும் அதிகாரிகள் முன்முயற்சியில், சம்பந்தப் பட்ட கைத்தறித் துறை அமைச்சரிடம் முறை யிட்டு கடந்தாண்டைப் போலவே அனை வருக்கும் கூடுதலாக 40 சதவீத போனஸ் மற்றும் டிவிடெண்ட் 14 சதவீதம் கொடுக்கப் படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2023-24 ஆம் ஆண்டிற் கான சங்கத்தின் 69 ஆவது பொது பேரவை சங்க அலுவலகத்தில் புதனன்று நடை பெற்றது. பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் மயி லாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன், சங்கத்தின் செயல் ஆட்சியர் கிரிதரன், கைத்தறி உதவி இயக்குநர் காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர். நெசவாளர்களுக்கு சென்ற ஆண்டில் வழங்கப்பட்ட போனசை விட இரண்டு சதவீ தம் கூடுதலாக 40 சதவீத போனஸ் ரூ.4.96 கோடி வழங்கப்பட்டது. மேலும், “இந்த திருபு வனம் கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கத்தை மேலும் முன்னெடுத்து, நெசவாளர்களை பாதுகாத்திட அனைத்து அங்கத்தினர்களும் ஒத்துழைக்க வேண்டும்” என அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அனைத்து கட்சி தொழிற் சங்க பிரதிநிதிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.