மயிலாடுதுறை, அக்.20 - மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், எடமணல் கிராமத்தில் 40 குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் நிகழ்ச்சி மற்றும் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக் கிழமை நடைபெற்றது. இதற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.கேசவன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பழனி சாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், கட்சி கொடியினை ஏற்றி வைத்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வர வேற்று சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். பாரதிராஜா ஆகியோர் உரையாற்றி னர். எடமணல் கிராமத்தில் குடியி ருப்புகளையொட்டிய பகுதியில் தார் தொழிற்சாலை நிறுவப்பட்டு செயல்பட்டு வந்தது. அந்த ஆலையி லிருந்து வெளியேறும் நச்சு கலந்த கழிவுகளால் எடமணல், வருசப்பத்து, வடகால், கடவாசல், திருக் கருக்காவூர் உள்ளிட்ட 10-க்கும் மேற் பட்ட கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட எந்த துறையிடமும் அனு மதி பெறாமல், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டுமென அரசு துறை அதிகாரிகளிடம் தொ டர்ந்து முறையிட்டும் நடவடிக்கை இல்லாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பிரச்ச னையை கையிலெடுத்து வலுவான போராட்டங்களை நடத்தியது. தலை வர்களை கைது செய்து, வழக்குப் பதிந்தது. இதுபோன்ற காவல் துறையின் அடக்குமுறைகளையும் மீறி மக்கள் நலனுக்கான போராட் டத்தை கைவிடாமல் நடத்தியதன் விளைவாக அந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது.