districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி

மயிலாடுதுறை மாவட்டமாக பிரிந்து 4 ஆண்டுகளான நிலையிலும், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் இலுப்பூர்-சங்கரன்பந்தலில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பெயர் பலகையில், நாகப்பட்டினம் மாவட்டம் என இருந்தது. இந்நிலையில் அது குறித்து தீக்கதிர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, பள்ளி பெயர் பலகையில் மயிலாடுதுறை மாவட்டம் என மாற்றி எழுதப்பட்டுள்ளது.