மன்னார்குடி, செப்.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட் டம் நீடாமங்கலம் நகர முன் னாள் செயலாளர் மற்றும் நீடா மங்கலம் ஒன்றியக் குழு உறுப் பினரான மறைந்த தோழர் சி.டி.ஜோசப் 3 ஆவது ஆண்டு நினைவேந்தல் நீடாமங்கலத் தில் உள்ள அவரது இல்லத் தில் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தோழர் ஜோசப்பின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவரது நினைவு களை போற்றி உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ். கலியபெருமாள், பி.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சுமதி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் தலைவர் பி.ரத்தினம், அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் தலைவர் கே.முனியாண்டி மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.