விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட முன்னாள் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான தோழர் எஸ்.நாகூரானின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் நீடாமங்கலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, தோழர் நாகூரான் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள், பி.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினரும் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான ரெ.சுமதி, ஒன்றிய செயலாளர் பி.ஜான்கென்னடி, நகரச் செயலாளர் வி.தமிழ்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் வி.பூசாந்திரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.