தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை 37 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அ.ஜான்பீட்டர் வரவேற்றார். இளங்கலையில் 1,335 மாணவிகளுக்கும், முதுகலையில் 296 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,631 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.