புதுக்கோட்டை, ஜன.17 - பொங்கல் பண்டி கையை யொட்டி, புதுக்கோட்டை அருகே வடமலாப்பூ ரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக் கட்டு போட்டியில், 33 பேர் காயம டைந்தனர். புதுக்கோட்டை அருகே வடமலாப்பூ ரில் பொங்கல் பண்டிகையை யொட்டி ஜல்லிக் கட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கொடி யசைத்து தொடங்கி வைத் தார். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா, கோட்டாட் சியர் பா.ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை, சிவ கங்கை, திண்டுக்கல், தஞ்சா வூர் உள்ளிட்ட மாவட்டங்க ளில் இருந்து காளை வளர்ப்போர் ஆர்வத்துடன் காளைகளைக் கொண்டு வந்திருந்தனர். இணைய வழியில் முன்பதிவு செய் திருந்த, தகுதியுள்ள 786 காளைகள் வாடிவாச லில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. 144 மாடு பிடி வீரர்கள் களமிறக்கப் பட்டனர். சிறப்பாக காளை களைத் தழுவிய வீரர்களுக் கும், காளைகளின் உரிமை யாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 19 பேர் மேல் சிகிச்சைக் காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 காளைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.