districts

img

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணி நெல்லை மண்டல தீயணைப்பு படையினர் 30 பேர் புறப்பட்டனர்

தென்காசி, ஆக - 4 கேரள மாநிலம் வய நாட்டில் நிலச்சரிவு  மற்றும்  வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ஈடுபட நெல்லை மண்டல தீய ணைப்பு மற்றும் மீட்பு படை யினர்  இரு வாகனத்தில் சுமார் 30 பேர் சென்றனர். தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் உத்தரவு படி திருநெல்வேலி துணை இயக்குனர் அறிவுத்தலின் படி,தென்காசி மாவட்ட அலுவலர் பானுப்பிரியா ஆலோ சனைப்படி கேரள மாநிலம்  வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிக்கு மீட்பு பணிக்கு தென்காசி நிலைய உதலி  மாவட்ட அலு வலர் தலைமையில் சுமார் 10 கமாண்டோ வீரர்கள் உட்பட நெல்லை மண்டலத்தில் இருந்து இரு வாகனத்தில் சுமார் 30 பேர் சென்றனர்.