districts

img

பழவேலங்குடியில் 30 குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

மயிலாடுதுறை, டிச.31-  மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் பழவேலங்குடி கிராமத்தில் 30 குடும் பங்களை சேர்ந்தவர்கள் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை  இணைத்துக்கொண்டனர்.  பழவேலங்குடி மேலத்தெருவில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்  கே.என்.ஸ்டாலின் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் விஜயகாந்த் கட்சி  கொடியினை ஏற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் நெடுஞ்செழியன் வரவேற் றார்.  மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் புதிதாக கட்சியில் இணைந்தவர் களுக்கு கதர் ஆடை அணிவித்து வாழ்த்தி,  வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் ஜி.ஸ்டாலின், ப.மாரியப்பன் மற்றும்  மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.