districts

img

பணி நிறைவு விழாவில் சிஐடியு-விற்கு ரூ.30 ஆயிரம் நிதி

கரூர், மே 28-

   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர்  மாவட்டத் தலைவர் எம். சுப்பிரமணியன்  பணி  நிறைவு பாராட்டு விழா கரூரில் நடைபெற்றது.  

    நிகழ்விற்கு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் பொன்ஜெயராம் வரவேற்றுப் பேசினார்.

    திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு  உறுப்பினர் எஸ்.பாலா, மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு,  மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்  தலைவர்கள் மொ.ஞானத்தம்பி, செல்வ ராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  சிஐடியு கரூர் மாவட்டக்குழு பயன்பாட் டிற்கு  புதிய கணினி வாங்குவதற்காக ரூ.30  ஆயிரம்,  நிர்மல் பள்ளி நிதியாக ரூ.10 ஆயிரம்,  அரசு ஊழியர் சங்கத்தின் கரூர்  மாவட்ட கட்டட  நிதியாக ரூ.ஐந்து ஆயிரம் என மொத்தம் ரூ.45  ஆயிரத்தை  மு.சுப்பிரமணியன்  குடும்பத்தி னர் வழங்கினர்.  

   எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சாவூர் கோட்டத்  துணைத் தலைவர்  வி.கணேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்  செயலாளர் ஜ.ஜெயராஜ், மருந்தாளுநர் சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   தமிழ்நாடு வருவாய்த்துறை நிர்வாக அலு வலர் சங்கத்தின் மாநில செயலாளர் எம்.எஸ்  அன்பழகன் நன்றி கூறினார்.