மதுரை, மே. 6-
மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வை பார்ப்பதற்காக மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வெள்ளியன்று வருகை தந்திருந்தனர்
இந்நிலையில் ஆழ்வார்புரம் பகுதியில் வைகையாற்றில் உள்ள தடுப்பணையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து வைகை ஆற்றின் கல்பாலம் பகுதியில் 2 சடலங்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டன. அதில் மதுரை விளாச்சேரி ஜோசப்நகர்பகுதியை சேர்ந்த 18 வய துடைய பிரேம்குமார் என்ற இளைஞரின் அடையாளம் கண்டுபிடிக் கப்பட்டது. மற்றொரு சடலம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் 3 உடல்களும் உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வடக்கு மாசி வீதி பகுதியில் இருந்து தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு வருகை தந்த சுடலைமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிவிழுந்து உயிரிழந்தார். மதுரையின் பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி வந்ததாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிற பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியையும் பாதுகாப்பு பணியையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.