வேதாரண்யம், ஜூன் 24 -
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தல் நடைபெறுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்-கிற்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் வேதாரண்யம் துணை காவல் கண்காணிப் பாளர் சுபாஷ் சந்திரபோஸ் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் ஆய்மூர் பகுதியில் இரவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 டிராக்டர் கள் மற்றும் மணல் அள்ளும் ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப் பட்டது.
இந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆய்மூர் பகுதியைச் சேர்ந்த ஜேசிபி எந்திரம் மற்றும் டிராக்டர் உரிமையாளர் இளையராஜா (36), அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (27), பழனிகுமார் (36) உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட மேலும் 5 பேரை தலைஞாயிறு போலீசார் தேடி வருகின்றனர்.