districts

img

ஏகோஜி மகாராஜபுரத்தில் 28 ஆவது நாளாக போராட்டம்

மயிலாடுதுறை, ஆக.3 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங் காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிரா மத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 28  ஆவது நாளான சனிக்கிழமையும் தொடர்ந்து  போராட்டம் நடைபெற்றது.  குடியிருக்க இடம் கேட்டு அரசு புறம் போக்கு இடத்தில் குடிசைக்கட்டி போராடி வரும் நிலையில், அரசு அதிகாரிகள் இடத்தை பிரித்து தராமல் அலட்சியம் காட்டி யதால் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் முன்னிலையில் 45 குடும்பங்களுக்கு இடங்கள் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.  இந்நிலையில் ஒவ்வொரு குடும்பத்தி னரும் கூரை வீடுகளை கட்டி குடியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக குடியிருப்பு கட்டப்பட்டு வருகிற இடங்க ளில், சுத்தம் செய்யும் பணி நடைபெறு கிறது.