திருச்சிராப்பள்ளி, ஏப்.1 - பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தல் சிறப்பு பேரவைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட் டம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியக் குழு சார்பில் திருவெள்ளறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பேசினர். ஏப்.1 முதல் 10 வரை சிறுகாம்பூர், வாழ்மால்பாளையம், நொச்சியம், திரு வெள்ளறை, மண்ணச்சநல்லூர் ஆகிய 5 முனைகளில் முதல் கட்ட தேர்தல் பிரச் சாரம் நடத்துவது. அதில் தோழமை கட்சி யினருடன் இணைந்து, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் கே.என்.அருண் நேருவிற்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரிப்பது என முடிவு செய் யப்பட்டது. பேரவையில், பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து விலகி மாவட்டச் செய லாளர் ஜெயசீலன் முன்னிலையில் 25- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த னர். ஒன்றியக்குழு உறுப்பினர் நல்லை யன் நன்றி கூறினார்.