நாகர்கோவில், மார்ச் 4 200 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணி யக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1822-ஆம் ஆண்டு தோள்சீலை அணியும் போராட்டத்தை பெண்கள் தொடங்கினர். பின்னர் இந்தப் போராட்டம் தீவிரமடைந்து பின்னர் இந்த முறை நீக்கப்பட்டது. தோள் சீலைப் போராட் டத்தை நினைவுகூரும் வகையில் 200-வது ஆண்டு நிறைவு தோள்சீலை போரா ட்டப் பொதுக்கூட்டம் நாகர் கோவிலில் 6-ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு நாக ராஜா திடலில் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங் கேற்றுப் பேசுகிறார்கள். இதற்கான மேடை அமைக்கும் பணி சனிக்கிழ மை தொடங்கியது. தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்க ராஜ், மேயர் ரெ.மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எ.வி. பெல்லார்மின், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி மற்றும் நிர்வாகிகள் பணிகளைப் பார்வையிட்டனர்.