தஞ்சாவூர், நவ.8 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத் திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் கடை வீதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தின கொடி யேற்று விழா, வாச்சாத்தி வழக்கு வெற்றி, பெண்ணுரிமை மாநாடு பட்டியலின பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டு தீர்மானங்கள் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அழகியநாயகிபுரம் கிளை செயலா ளர் எஸ்.ஜே.ராஜேஷ் கண்ணா தலைமை வகித்தார். மாதர் சங்க ஒன்றியத் தலைவர் ஏ.மேனகா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் சிறப்புரையாற்றினார். ஒன்றியச் செய லாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சியில் இணைந்தனர் தொடர்ந்து அழகியநாயகிபுரம் கிராமத் தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டன.