மன்னார்குடி, செப்.3 - தோழர் தனலட்சுமி அம்மையாரின் மறைவையொட்டி அவரது படத்திறப்பு திரு வாரூர் மாவட்டம் கடாரம்கொண்டானில் நடைபெற்றது. நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். தனலட்சுமி அம்மையாரின் உருவப் படத்தினை மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் திறந்து வைத்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் புவனேஸ்வரி, தமுஎகச மாவட்டத் தலைவர் எம்.சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேஷ், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செய லாளர் தங்க.தமிழ்செல்வன், என்.டி.இடி முரசு, அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பைரவநாதன், தமுஎ கச முன்னாள் செயலாளர் பகவான்ராஜ் ஆகியோர் பேசினர். தோழர் தனலட்சுமி அம்மையார் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாள ருமான ஆர். கோவிந்தராஜின் துணைவியார் ஆவார். ஆர்.கோவிந்தராஜ், அவரது மகன் வேத ராஜ் ஆகியோர் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.20 ஆயிரம் மற்றும் ஓராண்டு சந்தா ரூ.2 ஆயிரத்தை மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜனிடம் வழங்கினர்.