தஞ்சாவூர், ஆக.11 - தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழி யாக, பழங்கால சிலை ஒன்றை, விற்பனைக்காக, ஒரு கும்பல் கடத்தி வரு வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன், எஸ்.பி.,சிவகுமார் ஆகி யோருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. பிறகு திருச்சி ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன், தஞ்சாவூர் சரக ஆய்வாளர் கவிதா, எஸ்.ஐ. பாண்டியராஜ், எஸ்.எஸ்.ஐ., சிவபாலன் ஆகியோர் அடங்கிய குழு வினர் கடந்த சில நாட்களாக தஞ்சாவூர் - திருச்சி பகுதி யில் வாகன சோதனை நடத்தி னர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் திருவிழாப்பட்டி யில், ஒரு கார் ஒன்றும், இரண்டு பைக்குகளும் வெகு நேரமாக சந்தேகத் திற்கிடமாக நின்றன. அப் போது காரில் இருந்த சென்னை, அரும்பாக்கம், ஜெகநாதன் நகரைச் ரா ஜேந்திரன் (52), தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே அலமங்குறிச்சி யைச் சேர்ந்த ராஜ்குமார் (36), திருவாரூர் மாவட்டம் இனாம்கிளியூரைச் சேர்ந்த தினேஷ் (28), ஜெய்சங்கர் (58), கடலூர் மாவட்டம் நாட்டார்மங்கலம் பகுதி யைச் சேர்ந்த விஜய் (28) ஆகியோரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். அவர் கள் முன்னுக்குப் பின் முர ணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் களின் காரை சோதனை செய்த போது, 2.5 அடி உயர ஐம்பொன் பெருமாள் சிலையை மறைத்து வைத்தி ருந்ததை கண்டறிந்து கைப்பற்றினர். மேலும் சிலையை கொண்டு வந்த காருக்கு பாதுகாப்பாக இரு சக்கர வாகனத்தில் வந்த, தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூரைச் சேர்ந்த ஹாரிஸ் (26), காட்டு மன்னார்குடி அருகே கண்ட மங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26) உள்ளிட்ட ஏழு பேரையும் காவல்துறை யினர் கைது செய்தனர். பிறகு காவல் துறை யினர் நடத்திய விசாரணை யில், இனாம்கிளியூரைச் சேர்ந்த தினேஷின் தந்தை ஆனந்தகுமார் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, தொழுவூர் பகுதியில் ஆற்றில் தூர்வாரும் பணியில் ஈடு பட்டிருந்த போது, இந்த சிலை கிடைத்துள்ளது. இது குறித்து வருவாய் துறையின ரிடம் தகவல் அளிக்காமல், ஆனந்தராஜ் தனது வீட்டின் மாட்டுக் கொட்டகையில் வைத்து வழிபட்டு வந்துள் ளார். பிறகு ஆனந்தகுமார் மறைவுக்கு பிறகு, தினேஷ் வீட்டில் பாதுகாத்து வந்து உள்ளார். அப்போது, தினேஷ் உறவினரான தனியார் வங்கி யில் பணியாற்றிய ராஜ் குமார் ஒருமுறை சிலையை பார்த்து விட்டு, சிலையை கோடிக்கணக்கில் விற்பனை செய்யலாம் எனக் கூறி, விற்க திட்டமிட்டனர். பிறகு ராஜ்குமார் தனது நண்ப ரான சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியுடன் சிலையை 2 கோடி ரூபாய்க்கு விற்க முயன்றது தெரிய வந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஏழு பேரையும் கைது செய்து, ஒரு கார், 2 இரு சக்கர வாக னங்கள் மற்றும் சிலையை பறிமுதல் செய்த னர். அவர்களை வெள்ளிக் கிழமை கும்பகோணம் கூடு தல் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசார ணையில், இந்த சிலை 15 முதல் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. கைப்பற்றப் பட்ட சிலையானது சோழர் காலத்தில் செய்யப்பட்டிருக் கலாம் எனவும், இது தமிழ் நாட்டின் அறியப்படாத கோவிலில் இருந்து திருடப் பட்டிருக்கலாம் என்றும் பலத்த சந்தேகம் எழுந்து உள்ளது. இந்த சிலை எந்தக் கோயில் திருடப் பட்டது என்பது குறித்தும், இந்த வழக்கில் வேறு குற்ற வாளிகளுக்கு உள்ள தொ டர்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.