districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஒரே இடத்தில் பிடிபட்ட 2 மலைப் பாம்புகள்

திருச்சிராப்பள்ளி, ஜன.4 - திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் தங்கம் என்பவரது தோட்டத் தின் அருகே, பழனிச்சாமி என்பவரின் ஆடுகள் மேய்ந்து  கொண்டிருந்தன. அப்போது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு அருகே சென்று பழனிச்சாமி பார்த்த போது, 10 அடி  நீளம் கொண்ட இரண்டு மலைப் பாம்புகள் கிடந்துள் ளன.  அதில் ஒரு மலைப்பாம்பு ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கிய நிலையில் கிடந்தது. மற்றொரு மலைப்பாம்பு அதன் அருகிலேயே இருந்தது. இதனை கண்ட பழனிச் சாமி உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையின ருக்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் மனோகர்  தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத் திற்கு வந்து, இரண்டு மலைப் பாம்புகளையும் பிடித்து,  வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பயணி இறங்குவதற்குள் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பெண் கீழே விழுந்து காயம்

திருச்சிராப்பள்ளி, ஜன.4 - பயணி இறங்குவதற்குள் தனியார் பேருந்தை ஓட்டுநர்  இயக்கியதால், பெண் கீழே விழுந்து காயமடைந்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மேலகல்  கண்டார் கோட்டைக்கு தனியார் பேருந்து ஒன்று பொன் மலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந் தின் படிக்கட்டில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அதிகளவில் கூட்டமாக பயணித்தனர்.  அந்த பேருந்து பொன்மலை சி-டைப் மாரியம்மன் கோவில் அருகே உள்ள நிறுத்தத்தில் நின்ற போது,  பேருந்திலிருந்து பெண் பயணி ஒருவர் இறங்குவ தற்குள் பேருந்தை ஓட்டுநர் இயக்கிவிட்டார். இதனால் அந்த பெண் தடுமாறி கீழே விழுந்த நிலையில், சிறு  காயங்களுடன் உயிர் தப்பினார். சில மாணவ-மாணவி களும் கீழே விழுந்தனர். படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் நிலை இப்பகுதியில் தொடர்ந்து நீடிக்கிறது. காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  மேலும், அந்த தனியார் பேருந்து தினமும் கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் செல்வதால் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே இது  தொடர்பாக போலீசாரும், போக்குவரத்து துறையின ரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்கண்டார் கோட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரமற்ற சாலை அமைப்பு: செந்துறை மக்கள் குற்றச்சாட்டு

அரியலூர், ஜன.4 - அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ராயம் புரம் - பொட்டவெளி வரை தரமற்ற சாலை அமைப்ப தாகக் கூறி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறி யலில் ஈடுபட முயன்றனர். ராயம்புரம்-பொட்டவெளி வரை முதல்வரின் சாலை மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.1.88 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை ராயம்புரம் பகுதியில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.  அப்போது, அங்கு வந்த பொதுமக்கள் சாலையின் தரத்தை பார்வையிட்டு, இது தரமற்ற சாலை என்றும், ஏற்கனவே இருந்த சாலையை விட தற்போது அகலம் குறைந்துள்ளதாகவும், சாலையை அகலப்படுத்தி, இருபுறமும் மழைநீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரி அப்பகுதியில் சாலை மறிய லில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த செந்துறை காவல் துறையினர், கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரி வித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்பு  அனைவரும் கலைந்து சென்றனர்.

மக்களுடன் முதல்வர் முகாம்: திருச்சி மேயர் அன்பழகன் ஆய்வு

திருச்சிராப்பள்ளி, ஜன.4 - திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 3 இல் 40, 41 மற்றும் 42 ஆகிய வார்டுகளுக்கு, சக்தி நகரில் மக்க ளுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.  முகாமை மேயர் மு.அன்பழகன், மண்டல தலைவர் மு.மதிவாணன், உதவி ஆணையர் சரவணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றனர்.            இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத் தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப் படும். பொதுமக்கள் இம்முகாம்களை நல்ல முறையில்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும். துறை அலுவலர்கள்,  மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து,  அவர்களுக்கு உதவி கள் தாமதமின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகத்திற்கு  பியர்லஸ் தியேட்டர் எதிரே இடம் ஒதுக்க ஒப்புதல் சிபிஎம் போராட்டம் வாபஸ்

மயிலாடுதுறை, ஜன.4 - மாணவர்கள், இளைஞர்கள், புத்தக  வாசிப்பாளர்கள் பயன்படும் வகையில், மயி லாடுதுறை மாவட்ட மைய நூலகத்திற்கு நகர மையப் பகுதியில் நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் ஜன.4 அன்று மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பியர்லஸ் திரையரங்கு எதிரே நூலகம் அமைக்க தேவையான இடத்தை  ஒதுக்குவதாக மயிலாடுதுறை நகராட்சி அறிவித்தது. இதையடுத்து போராட்டம் கை விடப்பட்டது.      மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட மைய நூலகம் அமைக்க தமிழக அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்காக, மயிலாடுதுறை நகரில் 26,500 சதுர  அடி இடம் ஒதுக்க மயிலாடுதுறை நகராட்சி  ஆணையருக்கு வேண்டுகோள் வைக்கப் பட்ட நிலையில், தருமை ஆதீன மகப்பேறு  மருத்துவமனை வளாகத்தில் அதிக இடம்  இருப்பதால் அங்கு இடம் தரவேண்டுமென்ற கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் ஏற்க வில்லை. அதைத் தொடர்ந்து ஆரோக்கிய நாதபுரத்தில் உள்ள நகராட்சி இடத்தில் இடம்  ஒதுக்கியது. இதை முற்போக்கு அமைப்புகள், பொது மக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்றுக்  கொள்ளவில்லை. நகரின் பிரதான பகுதி யில் இடம் இல்லை என நகராட்சி கூறிய தையடுத்து, திமுக உயர்மட்டக் குழு உறுப்பி னர் குத்தாலம் கல்யாணம் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம்,  திராவிடர் விடுதலைக் கழகம், மதிமுக, தமிழர் தேசிய முன்னணி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட 19 அமைப்பு களின்  சார்பில் நகராட்சியை எதிர்த்து ஜன.4  அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் மாபெரும் சாலை மறியலை நடத்து வதென முடிவெடுக்கப்பட்டது. இதனிடையே கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மயிலாடுதுறை பியர்லஸ் திரையரங்கு எதிரே யுள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை மாவட்ட மைய நூலகம் அமைக்க ஒதுக்கித்  தருவதாக நகராட்சி நிர்வாகம் ஒத்துக் கொண் டது. இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.

திருச்சியில் இன்று சாரணர் முகாம்: 2500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜன.4 - திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத் தில் வெள்ளிக்கிழமை (ஜன.5) தேசிய அளவி லான 20 ஆவது அகில இந்திய ரயில்வே ஜம்போரெட் நடைபெறுகிறது.  இதில் தெற்கு ரயில்வே சார்பில் பாரத்  சாரணர் மற்றும் வழிகாட்டிகளால் ‘எங்கள் கலாச்சாரம் பாரம்பரியத்தை நினைவு கூருங்கள்’ என்ற தலைப்பில் ஜன.5 முதல் 9  வரை அணி வகுப்புகள், இக்கட்டான நேரத் தில் அவர்களின் திறனை வெளிப்படுத்தும் செயல்பாடுகள், கூடாரங்கள் அமைத்தல், அந்தந்த மாநிலங்களின் கலாச்சார மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடை பெற இருக்கின்றன. இதில் நாடு முழுவதும் இருந்து 16 ரயில்வே துறை சார்பாக சாரணர் மற்றும் வழிகாட்டிகள் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் அந்தந்த ரயில்வே துறை பொது மேலாளர்கள், சாரணர் இயக்கத் தின் பொது செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்காக பொன்மலை பகுதியைச் சுற்றிலும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. இதற்காக பாரத் சார ணர் மற்றும் வழிகாட்டிகள் பொன்மலை ரயில்வே மைதானத்தில் கூடாரங்களை அமைத்துள்ளனர். இதில் 2500-க்கும் மேற்பட்ட சாரணர் இயக்கத்தை சேர்ந்த வர்கள் கலந்து கொள்வார்கள் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஜன.7 அன்று நடைபெறும் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்ச ரும், தமிழ்நாடு பாரத் சாரணர் மற்றும் வழி காட்டிகளின் தலைவருமான அன்பில் மகேஷ்  பொய்யாமொழி கலந்து கொள்கிறார்.

சாலை விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆறுதல்

புதுக்கோட்டை, ஜன.4 - புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை யில் வியாழக்கிழமை நேர்ந்த சாலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மணியடிப்பட்டியைச் சேர்ந்தவர் பி. கணேசன்(54). இதே ஊரைச் சேர்ந்தவர் ஆர். ரங்கசாமி (54). கல் உடைக்கும் தொழிலா ளர்களான இவர்கள் இருவரும் பொம்மாடி மலையை நோக்கி இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது, இவர்களது மோட்டார் சைக்கிள்  மீது திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. அதில், கணேசன், ரங்கசாமி ஆகியோர் படுகா யங்களுடன் உயிரிழந்தனர். இச்சம்பவத் தில், அரசுப் பேருந்து ஓட்டுநரான ஆவுடை யார்கோவில் அருகே பூவலூரைச் சேர்ந்த ச.முருகையா (49) என்பவரை கீரனூர் போலீ சார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். எம்எல்ஏ-க்கள் ஆறுதல் உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப் பட்டிருந்த இறந்தவர்களின் உடலுக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், முன்னாள்  எம்எல்ஏ பா.ஆறுமுகம், அரசு ஒப்பந்ததாரர் எம்.சுரேந்தர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

ஆதரவற்றோருக்கு லயன்ஸ் சங்கம் போர்வை வழங்கல்

தஞ்சாவூர், ஜன.4 -  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், சேவை திட்டங்களின் ஒரு பகுதியாக குளிரில்  வாடும் ஏழைகளுக்கு போர்வை வழங்கப்பட் டது.  அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், கல்வி உதவித்தொகை, ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு சேவைத் திட்டங்கள் செய்யப்பட்டு வரு கின்றன. அந்த வகை யில், தற்போது குளிர் காலமாக இருப்பதால், அதிராம்பட்டினம் பேருந்து  நிலையம், கிழக்கு கடற் கரை சாலை, ரயில் நிலை யம் உள்ளிட்ட பொது  இடங்களில் உறங்கும்  ஆதரவற்ற ஏழைகள்,  மனநலம் பாதிக்கப்பட்ட வர்கள், யாசகர்கள் ஆகி யோரை தேடிச் சென்று,  அவர்களை குளிரின் தாக் கத்தில் இருந்து பாது காக்கும் வகையில் போர்வைகள் வழங்கப் பட்டன. இந்நிகழ்வில், அதி ராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா  அகமது கபீர், செய லாளர் ஹாஜா நசுருதீன், துணைத் தலைவர் ஆரிப், முன்னாள் தலை வர் ஆறுமுகம் சாமி, உறுப்பினர் ஜமீல் உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர். 

நிலக்கடலையில்  ஒருங்கிணைந்த  பயிர் மேலாண்மை

தஞ்சாவூர், ஜன.4 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ச.மாலதி மேற் பார்வையில், ஏனாதி  கிராமத்தில் ஒருங்கி ணைந்த நிலக்கடலை சாகுபடி குறித்து விவ சாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.  பயிற்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் தீபிகா சுதாகர் தலைமை வகித் தார். வேளாண்மை அலு வலர் அப்சரா வரவேற்று பேசினார்.  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், பட்டுக் கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் (பயிர் பெருக்கம் மற்றும்  மரபியல்) சித்ரா பேசு கையில், “நிலக்கடலை யில் உயர் விளைச்சல் தரும் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். பருவத் திற்கு ஏற்றார் போல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். விதை களை விதை நேர்த்தி செய்து விதைப்பதால், விதையின் மூலம் பரவக் கூடிய நோய்களை கட்டுப் படுத்தலாம். தொழு உரம் அதிகளவில் பயன் படுத்த வேண்டும். கட லையில் ஜிப்சம் இடு வதால் அடர்த்தியான செடிகளும், திரட்சியான கடலையும், நல்ல மகசூ லும் கிடைக்கும்” என்றார்.  பின்னர் விவசாயி கள், தங்களது சந்தே கங்களை இணைப் பேரா சிரியரிடம் கேட்டறிந்த னர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சன்மதி நன்றி கூறினார்.

முதன்மை கல்வி அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன.4 - முதன்மை கல்வி அலுவலரின் ஊழியர்  விரோதப் போக்கை கண்டித்து வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் முதன்மை கல்வி அலுவலர் ஊழி யர்களை அச்சுறுத்தும் வகையில் ஊழியர் விரோதப் போக்குடன் தொடர்ந்து செயல்பட்டு  வருவதை கண்டித்தும், கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் கடந்த நான்கு மாதங்களில் மாற்றுப்  பணி, நிர்வாக மாறுதல் என்ற பெயரிலும் பல்வேறு ஆணைகளை வழங்கி கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்.  இதுகுறித்து முறையீடு செய்ய சென்ற  சங்க நிர்வாகிகளிடம் விரோத மனப்பான்மை யுடன் பேசி வருகிறார். தற்போது நிர்வாகம்  மாறுதல் என்ற பெயரில், மூன்று ஊழியர் களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணியிட மாறுதல் களை உடனே ரத்து செய்ய வேண்டும்.  முதன்மை கல்வி அலுவலரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, கரூர் முதன்மை  கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு  கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத் தின் மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு.செல்வராணி, தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் பொன்ஜெயராம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வீட்டுமனைப் பட்டா வழங்கிய முதல்வருக்கு பயனாளிகள் நன்றி

திருச்சிராப்பள்ளி, ஜன.4 - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் நடைபெற்ற மாபெரும் பட்டா  வழங்கும் விழாவில், 2000 பயனாளி களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்டு வீட்டு மனைப் பட்டாக்களை பெற்ற பயனா ளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்களது நீண்ட நாள் கோரிக்கை களை நிறைவேற்றிக் கொடுத்த தற்காக நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து பயனாளி ஒருவர்  கூறுகையில், “எனது பெயர் டி. சங்கீதா (40). எனது கணவர் பெயர் திருப்பதி. நான் துறையூர் வட்டம், புத்தனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வள். என் கணவர் துணி கடையில் கூலி வேலை பார்க்கிறார். 2013 லிருந்து  நான் வீட்டுமனை பட்டா வாங்க  முயற்சித்தேன். ஆனால் கிடைக்க வில்லை. இப்போது பட்டா கிடைத்தது  மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பட்டா வழங்கிய முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார். இதுகுறித்து பி.சத்யா (40) கூறு கையில், “ஸ்ரீரங்கம் வட்டம், பெருக மணி கிராமத்தைச் சேர்ந்த நான் கூலி  வேலை செய்து வருகிறேன். என் கணவர் விவசாயம் செய்கிறார். நான்  எட்டு ஆண்டுக்கும் மேல் பட்டாவுக் காக ரொம்ப முயற்சி செய்தேன். கிடைக்கவே இல்லை. தற்போது பட்டா கேட்டு விண்ணப்பித்த நிலை யில், பட்டா கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். பயனாளி ஆர்.ராஜேந்திரன் (66) கூறுகையில், “லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், எம். கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த நான் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். பட்டா என் அம்மா பெயரில் இருந்தது. என்னுடைய பெயருக்கு மாற்றித் தரக் கோரி  விண்ணப்பித்திருந்தேன். தற்போது எனது பெயருக்கு மாற்றி கொடுத்து,  வீடு கட்டுவதற்கு தயாரான நிலையில் பட்டா கிடைத்தது பயனுள்ளதாக இருக்கிறது. முதலமைச்சருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.