districts

திருச்சி முக்கிய செய்திகள்

1500 டன் யூரியா உரம் கும்பகோணம் வருகை

கும்பகோணம், ஜன.17 - தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான தெலுங்கானா வில் இருந்து, விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக கும்பகோணத்திற்கு 1500 டன் யூரியா உரம் சரக்கு ரயில்  மூலம் வந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. தஞ்சை, திருவா ரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி  நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு சாகுபடிக்கும் வெளி  மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து சரக்கு ரயில்  மூலம் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வர வழைக்கப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும்  கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியிலிருந்து சரக்கு ரயில் மூலம் 29 வேகங்களில் 1500 டன் யூரியா உரம் கும்பகோணம் ரயில் நிலையத் திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து உர  மூட்டைகள் 75 லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை,  திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மாணவி ஆற்றில் சடலமாக மீட்பு

தஞ்சாவூர், ஜன.17 - தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் அருகேயுள்ள பிருந்தா வனம் பகுதி டி.சி.டபிள்யூ.எஸ். நகரைச் சேர்ந்தவர் வேத குமார். இவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் புவனேஸ்வரி (17) தஞ்சாவூரிலுள்ள பள்ளி யில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் சிவகங்கை பூங்கா அருகேயுள்ள தனது தோழி  வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புதன்கிழமை  பிற்பகல் புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவர் நெடுநேர மாகியும் வீடு திரும்பாததுடன், அவரது கைப்பேசியும் அணைக்கப்பட்டிருந்தது. இதனால், அவரது சித்தப்பா ஆனந்த் கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், புவனேஸ்வரி தஞ்சாவூர் பள்ளியக்ர ஹாரம் அருகே வெண்ணாற்றில் வியாழக்கிழமை சடல மாக மீட்கப்பட்டார். இவரது உயிரிழப்புக்கான காரணம்  குறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

குளத்தில் தவறி விழுந்த பந்து:  சிறுமி நீரில் மூழ்கி பலி

தஞ்சாவூர், ஜன.17 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அய்யப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவ ருக்கு ஒரு மகனும், ஹரிணி ஸ்ரீ(9) என்ற மகளும் உள்ள னர். இதில், ஹரிணி ஸ்ரீ தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.   பொங்கல் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை காலை தனது சக நண்பர்களுடன் வீட்டின் பின்புறம், நாடியம்மன்கோவில் குளக்கரையில், ஹரிணி ஸ்ரீ விளை யாடிக் கொண்டிருந்த போது, ஹரிணிஸ்ரீ கையில் இருந்த  பந்து குளத்தில் தவறி விழுந்துள்ளது. குளத்தில் விழுந்த பந்தை எடுப்பதற்காக, ஹரிணிஸ்ரீ குளத்தில் இறங்கியுள்ளார். இதில், எதிர்பாராத விதமாக,  கால் வழுக்கி குளத்தில் விழுந்த ஹரிணிஸ்ரீ கதறியுள்ளார்.  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை யடுத்து, ஹரிணி ஸ்ரீயின் தந்தை சந்திரன் மகளை மீட்டு,  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றார்.   அங்கு, ஹரிணி ஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை நகரக் காவல் துறை யினர் ஹரிணிஸ்ரீ உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர். 

கூரை வீடு எரிந்து நாசம்: எம்எல்ஏ நிவாரண உதவி 

மயிலாடுதுறை, ஜன.17 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள  காட்டுச்சேரி ஊராட்சி மேட்டுமிஷன் தெருவில் வசிக்கும் சாந்தகுமாரி என்பவரது கூரை வீடு வியாழனன்று அதி காலை எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து எரிந்து  சாம்பலானது. நல்வாய்ப்பாக தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் உயிர் தப்பினர்.  இதுகுறித்து தகவலறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் சம்பவ இடத்துக்கு நேரில்  சென்று, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்ட சாந்தகுமாரி குடும்பத்தின ரிடம் ரூ.10 ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி சேலை, காய்கறி கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

ஜன.20-இல் தொழில்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

தஞ்சாவூர், ஜன.17 -  தேசிய தொழில்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ், தொழில்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் ஜன.20 அன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. முகாமில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு  அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை  நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி  நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு  ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பி.இ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் பிரஷ்ஷர் அப்ரண்டிஸ் ஆக சேர்த்து 3 முதல் 6 மாத  கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள்  வரை தொழில்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெறலாம். இத்தொழில் பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு  மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய  அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ள தாக அமையும். மேலும், தகவல்களுக்கு உதவி இயக்கு நர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தஞ்சாவூர், தொலைபேசி எண்:04362-278222 என்ற எண்ணில் தொடர்பு  கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா  பங்கஜம் தெரிவித்துள்ளார்.

புத்தகத் திருவிழாவுக்கு சேமிப்பு உண்டியல் வழங்கல் 

திருநெல்வேலி, ஜன.17- திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், புத்தகத் திருவிழாவுக்கான சேமிப்பு உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி வர்த்தக மையத்தில் ஜன.31 ஆம் தேதி முதல், பிப்.10 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் மாணவிகள் புத்தகம் வாங்க ஏதுவாக, ஒவ்வொருவருக்கும் பணம் சேமிக்க உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓவியர் சந்ரு, எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  ஆன்பிராங்க் எழுதிய டைரி குறிப்புகள், லட்சுமணப்பெருமாள் எழுதிய வயனம் சிறுகதை ஆகியவை குறித்து எழுத்தாளர் கே.ஜி. பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். 500 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உண்டியல் வழங்கப் பட்டது. வட்டாட்சியர் செல்வம், புகைப்படக் கலைஞர் ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.