districts

திருச்சி முக்கிய செய்திகள்

அறந்தாங்கி அருகே  150 கிலோ கஞ்சா பறிமுதல்

அறந்தாங்கி, நவ.1 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த  குரும்பூர் மேடு அருகே, அறந்தாங்கி காவல் ஆய்வாளர்  கருணாகரன், உதவி ஆய்வாளர் சூர்ய பிரகாஷ் தலை மையில் காவல்துறையினர்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு இருசக்கர  வாகனம் மற்றும் ஒரு காரை சோதனை செய்தனர். அதில் ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக  கடத்த முயன்ற ரூ.27 லட்சம் மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த  வாகனங்களில் வந்த மூவரை கைது செய்துள்ள நிலை யில், ஒருவர் தப்பியோடிவிட்டார். கார், இரண்டு மோட்டார்  பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடி யவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பட்டாசுத் தீயால் தீப்பற்றி எரிந்த கூரை வீடுகள்'

பாபநாசம், நவ.1 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதி கோயில் புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. அப்பகுதியில் பட்டாசு வெடித்த நிலை யில், இவரது கூரை வீட்டில் தீப்பொறி பட்டு எரிந்தது. இதில் வீட்டிலிருந்த துணிகள், பாத்திரங்கள் தீயில் கருகின. இதுகுறித்த தகவலின் பேரில் அங்குச் சென்ற பாப நாசம் தீயணைப்பு நிலையத்தினர் தீயை அணைத்தனர்.  இதேபோன்று பசுபதி கோயில் எழில் நகரில், பட்டாசு வெடித்த போது மகாதேவன் என்பவரது கூரை வீடு தீப்பற்றி  எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், அங்குச் சென்ற  பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினர், தீ மேலும் பர வாமல் அணைத்தனர்.

உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்கள் அமைக்க 40 சதவீத மானியம்

மயிலாடுதுறை, நவ.1 - பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதி தாக உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்கள் கட்டுவதன் வாயி லாக, தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியினை அதிகரிக்க வும், புதிதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்பு வோர் பயன்பெறும் வகையில் உவர்நீர் இறால் வளர்ப்பிற் காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீடுகள் வழங்கு தல் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பொதுப்  பிரிவில் 5.5 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் ஒரு  ஹெக்டேர் அலகிற்கு ரூ.14 லட்சம் அலகு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுப் பிரிவின ருக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படும்.  இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள பயனாளிகள்  41-யு, தென்பாதி மெயின் ரோடு, பெஸ்ட் பள்ளி வளாகம்  எதிரில், சீர்காழி– 609111 என்ற முகவரியில் இயங்கி வரும்  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், மயிலாடுதுறை (இருப்பு) சீர்காழி அலுவலகத்தை அணுகி  பயன்பெறலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

நவ.7-இல் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் தஞ்சை வருகை  முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

தஞ்சாவூர், நவ.1-  நவ.7 ஆம் தேதியன்று துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  வருகை தருவதையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தலைமையில், மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவ லர்களுடன் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற  உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திரு வையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சா வூர்), க.அன்பழகன் (கும்பகோணம்), என்.அசோக்குமார் (பேராவூரணி), தஞ்சாவூர் மேயர் சண்.இராமநாதன், மாவட்ட வருவாய்  அலுவலர் தெ.தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், மாவட்ட ஊராட்சித் தலை வர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி  துணை மேயர்கள் மரு.அஞ்சுகம் பூபதி  (தஞ்சாவூர்), சுப.தமிழழகன் (கும்பகோ ணம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் வருகையின் போது மாவட்ட நிர்வாகம்  சார்பில், பொதுமக்களுக்கு வழங்கப்பட வுள்ள நலத்திட்ட விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட அலு வலர்கள், விழாவிற்கான நலத்திட்ட உதவி கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார். முன்னதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தன்னார்வலர்களுக்கு உதவி  உபகரணங்களை அமைச்சர் மற்றும் ஆட்சி யர் வழங்கினர்.  அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவி கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ள அண்ணா  நூற்றாண்டு விழா அரங்கம், திறக்கப்பட வுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவ லகம் ஆகிய இடங்களை அமைச்சர், எம்.பி,  எம்எல்ஏ-க்கள் ஆய்வு செய்தனர்.

ஓவிய, சிற்ப கண்காட்சியில் பங்கேற்க 7 மாவட்ட கலைஞர்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர், நவ.1-  ஓவிய, சிற்ப கண்காட்சியில் பங்கேற்க ஏழு மாவட்ட கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “ தஞ்சை  மண்டல கலை பண்பாட்டு மையத்துக்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கட லூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயி லாடுதுறை மாவட்டங்களில் உள்ள ஓவியர்கள்  மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்பு களை சந்தைப்படுத்தவும், காட்சிப்படுத்த வும் ஓவிய, சிற்ப கண்காட்சி நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டு வருகிறது.  இந்த ஓவிய, சிற்ப கண்காட்சிக்கு கலை ஞர்கள் தங்கள் மரபு வழி, நவீன பாணி ஓவி யங்கள், தஞ்சை ஓவியங்கள் மற்றும் அனைத்து வகையான சிற்ப படைப்புகளை வழங்க வேண்டும். இவை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.  இந்த கலைப் படைப்புகள் அனைத்தும்  மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் அளவில், ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு முதல்  பரிசாக ரூ.5,000, 2 ஆம் பரிசாக ரூ.3,000, 3 ஆம்  பரிசாக ரூ.2,000 என தலா ஒவ்வொரு பிரிவி லும் ஏழு கலைஞர்களுக்கு என 21 பேருக்கு  வழங்கப்படும்.  எனவே ஓவிய, சிற்ப கலைஞர்கள், உதவி  இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகே, வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்  613 403 என்ற முகவரிக்கு நவம்பர் 20 ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 04362- 232252, 94425 07705 என்ற எண்ணை தொடர்பு கொண்டு  தெரிந்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

யானை வேறு  இடத்திற்கு சென்றதால் திருக்குறுங்குடிக்கு  செல்ல அனுமதி'

திருநெல்வேலி நவ 1- நெல்லையில் திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் யோ கேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வன உயிரினக்காப்பாளர்,களக்காடு சரணாலயம்,களக்காடு அவர்களின் உத்தரவின்பேரில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு கோட்டத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி வனச்சர கம் நம்பிகோவில் பகுதியில் 31.10.2024 ஆம் தேதி யானை நட மாட்டம் காரணமாக நம்பிகோவில் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி  மறுக்கப்பட்ட நிலையில் யானை நடமாட்டமானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. தற்போது யானைக் கூட்டம் குட்டிகளுடன் வேறு பாதுகாப் பான இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளது. இதையடுத்து 01.11.2024ஆம் தேதி முதல் நம்பிகோவில் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.  மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வன பகுதிகளுக்குள் உள்ள பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அமைதியான முறையில் சென்று வரவும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. வனத்துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் முழு  ஒத்துழைப்பு வழங்குமாறு களக்காடு வனக்கோட்டம் திருக்குறுங் குடி வனச்சரகம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு; 60 பேர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி, நவ. 1- தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகை வியாழ னன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8  மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க  வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆயினும் ஆங்காங்கே தடை செய்யப் பட்ட நேரங்களிலும் பட்டாசு வெடித்துள்ளனர்.  இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு  நிர்ணயம் செய்த நேரத்தை தாண்டி பட்டாசு  வெடித்ததாக  27 பேர் மீதும் தீபாவளி பண்டிகை யின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 33 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரயில்வே தண்டவாளத்தில்  மீண்டும் பாறாங்கற்கள்

தென்காசி, நவ. 1- கடையநல்லூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மீண்டும் பாறாங்கற்கள். ஓட்டுநரின் முன்னெச்சரிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது. செங்கோட்டையிலிருந்து அக் 31 வியாழனன்று மாலை 6:20 மணியளவில் சென்னை நோக்கி 24 பெட்டிகளோடு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் கடைய நல்லூரை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது போக நல்லூர் காக்கநல்லூர் இடையே ரயிலின் தண்டவாளத்தில் 2 பாறாங்கற்கள் இருந்தன. அவற்றைக்கண்ட ரயில் ஓட்டுநர் மாடசாமி உடனடியாக ரயிலை நிறுத்தி கொட்டும் மழையிலும் பாறாங்கற்களை அகற்றி அங்கிருந்து ரயிலை இயக்கினார். இது குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரிகின்றனர்.. ஏற்கனெவே கடந்த மாதம் இதே போல சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.