districts

img

சென்னை, மதுரை, கரூர், கோவைக்கு திருச்சியிலிருந்து 15 புதிய பேருந்துகள் இயக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 20- திருச்சியில் இருந்து சென்னை, மதுரை,  கரூர், கோவைக்கு புதிய பி.எஸ்.-6 ரக  பேருந்துகளை அமைச்சர்கள் கொடிய சைத்து துவக்கி வைத்தனர். தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சி  மாவட்டம் விளங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு  சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி வழியாக பயணம் செய்து  வருகின்றனர். இந்நிலையில், பயணிகள் அதிகரிப்பு காரணமாக சென்னை, மதுரை, கோவை  உள்ளிட்ட  பகுதிகளுக்கு பேருந்து சேவையை  அதிகரிக்கும் வகையில், திருச்சி மாவட்டத் திற்கு 90 புதிய பேருந்துகள் வழங்க தமிழ்நாடு  முதலமைச்சர் ஆணையிட்டார். ஏற்கனவே 65 பேருந்துகள் வழங்கிய  நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்  கழகம் கும்பகோணம் லிட் சார்பாக பொது மக்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, இராம நாதபுரம், கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 15  புதிய பி.எஸ். -6 ரக பேருந்துகள் துவக்க விழா  சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர், பி.எஸ்-6 ரக 15 புதிய  பேருந்துகளை  கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநக ராட்சி ஆணையர் சரவணன், கோட்ட மேலாண் இயக்குநர் மகேந்திர குமார், அரசு  போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், பொது  மேலாளர் சிவசங்கரன் (கரூர்)  உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.