districts

img

கூவத்தூர் கிராமத்தில் 14 ஆம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டெடுப்பு

அரியலூர், மே 5 - ஆண்டிமடம் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கட்டிடப் பணிகளுக்காக  தோண்டும் போது, வள்ளி தேவசேனா சமேத முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் கடந்த பிரசித்தி பெற்ற  இந்த கோவிலை புனரமைத்து கும்பாபி ஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்த னர். இத்திருப்பணிகளுக்காக பழைய கோவிலை அகற்றிவிட்டு, புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  கோவிலின் அஸ்திவாரத்திற்கு அடி யில் குழி தோண்டும்போது, பூமிக்கு அடியில்  இருந்து வள்ளி தேவசேனா சமேத முரு கன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. கோவில் அடிவாரத்தில் கிடைத்த முருகன்  சிலை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. முருகன் சிலை கண்டெடுக்கப் பட்டதை அறிந்த பொதுமக்கள் கோவி லுக்கு வந்து வள்ளி தேவசேனா சமேத முருகனை வழிபட்டனர். கண்டெடுக்கப்பட்ட சிலை குறித்து அரியலூர் அரசு கலைக் கல்லூரி வர லாற்றுத்துறை தலைவர் ரவியிடம் கேட்ட போது, “வள்ளி தேவசேனா சமேத முருகன்  சிலையை பார்க்கும் போது இது பிற்கால பாண்டியர்களின் வடிவமைப்பை ஒத்துள் ளது. கங்கைகொண்ட சோழபுரத்தை 250 ஆண்டுகள் தலைநகராக கொண்டு சோழ வம்சம் ஆட்சி செய்தது.  இவர்களுக்குப் பிறகு இப்பகுதி 14 ஆம்  நூற்றாண்டில் பிற்கால பாண்டியர்கள் வசம் இருந்தது. அவர்கள், சோழர்கள் கட்டிய கோயிலை சீரமைத்த போது தங்கள்  பாணியில், கற்சிலைகளில் தெய்வங்களை  வடிவமைத்து வழிபாடு செய்தனர். தற் போது கிடைத்துள்ள இந்த வள்ளி தேவ சேனா சமேத முருகன் கற்சிலை பிற்கால 14 ஆம் நூற்றாண்டு பாண்டியர்கள் ஆட்சி  காலத்தின் வடிவமைப்பை கொண்டுள்ளது”  என்று கூறினார்.