districts

img

143 எம்.பி.க்கள் இடைநீக்கம் ஒன்றிய அரசைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.24 -  நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் 143 உறுப்பினர்களை ஒன்றிய பாஜக அரசு இடைநீக்கம் செய்ததை கண்டித்து திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்எம்பி.துரைவேலன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலா ளர் அன்பு வே.வீரமணி, நகரத் தலை வர் விகேஎஸ்.அருள் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத் தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விசிக தஞ்சை மாவட்டச் செயலாளர் தமிழன், முன்னாள் மாவட்டச் செய லாளர் உறவழகன், ஒன்றியச் செய லாளர்கள் ஜெயக்குமார், குணசேக ரன், ஒன்றியப் பொருளாளர் பசுபதி வளவன், ஒன்றியத் துணைச் செயலா ளர் செங்கோடன், மாவட்ட விவசாய  அணி செயலாளர் தமிழ்வளவன், பாபநாசம் நகரச் செயலாளர் யோ வான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.