districts

img

120 தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.6 - ஸ்ரீரங்கம் கோயிலில் பணியாற்றிய 120 தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி  கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோயிலில் கடந்த 16 ஆண்டு களாக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த 120 தூய்மைத் தொழிலாளர் களுக்கு ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் வேலை வழங்க வேண்டும்.

லட்சக் கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலைக்கு ஆள் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  120 தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தொழி லாளர்களின் வறுமையை வெளிப் படுத்தும் வகையிலும் சிஐடியு சார்பில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழி லாளர்கள் சங்கம் தலைமையில், தூய்மைப் பணியாளர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரங்காரங்கா கோபுரம் அருகே செவ்வாயன்று கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

போராட்டத்திற்கு சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். போராட்டத்தை சங்க மாவட்டச் செயலாளர் மாறன் துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் சந்துரு, சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.