திருச்சிராப்பள்ளி, ஜூலை 21 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஞாயிறன்று ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நான்கு மையத்தில் நடைபெற்றது. இதில் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் 326 தேர்வர்களும், ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 318 தேர்வர்களும், ஆர்.சி, மேல்நிலைப் பள்ளியில் 333 தேர்வர்களும், செயிண்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 143 தேர்வர்களும் என மொத்தம் 1120 பேர் தேர்வு எழுதினர். செயின் ஜேம்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்விற்கு விண்ணப்பித்த 1167 தேர்வர்களில், 47 பேர் தேர்வு எழுதவில்லை.