கும்பகோணம், ஜூன் 3-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 108 மாணவ, மாணவியர் பணிவாய்ப்புப் பெற்றனர். ஆர்சின் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு 20 மாணவர்களும், ஸ்ரீ பாலாஜி மெட்ரிக் மேனிலைப்பள்ளிக்கு 20 மாணவியரும், புருடுள் நிறுவ னத்திற்கு 68 மாணவியரும் தேர்வு செய்யப்பட்டனர்.
வளாக நேர்காணலுக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைப் பேரா சிரியர் பிச்சை மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் இரமேஷ் சாமியப்பா ஆகியோர் செய்திருந்தனர். வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியரைக் கல்லூரி முதல்வர் (பொ) மா.மீனாட்சிசுந்தரம் வாழ்த்தினார். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா.ச.சுந்தரராசன், இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத்தலைவர் தங்கராசு ஆகியோர் பணி ஆணைகளை மாணவ, மாணவியர்க்கு வழங்கினர்.