அறந்தாங்கி, அக்.31 - மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் ஒன்றியம் காவதுகுடி ஊராட்சி அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் 1038 பனை விதை கள் நடப்பட்டு குறுங்காடு அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. புன்னகை அறக்கட்டளை நிறுவன மாநிலத் தலைவர் ஆ.சே.கலைபிரபு தலைமை வகித்தார். காவதுகுடி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா சோணமுத்து, துணைத் தலைவர் கணேஷ்ராமையா, மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் பிரகாஷ்நாராயணன் மற்றும் அறக்கட்டளை தமிழ்மரம் நட்டல் திட்ட தலைவர் அழகு கூத்தையா, புதுகை மாவட்டத் தலைவர் சீரஞ்சீவி ஆகியோர் பனை விதைகளை நட்டு துவக்கி வைத்தனர். கிராம பொது மக்களும் பனை விதைகளை நடவு செய்தனர்.