districts

திருச்சி முக்கிய செய்திகள்

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 101 நிறுவனங்களுக்கு அபராதம்

தஞ்சாவூர், ஆக.16- தஞ்சாவூர் மாவட்டத்தில், சுதந்திர தினமான வியாழக்கிழமை விடுமுறை அளிக்காத 101 நிறுவ னங்களுக்கு தொழிலாளர் துறையினர் அபராதம் விதிக்க  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், தேசிய பண்டிகை விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று, தமிழ்நாடு தொழில் நிறுவ னங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை கள்) சட்டம் மற்றும் விதிகளின்கீழ் கடைகள், வணிக நிறு வனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிப்பது தொடர்பாக 163 நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை  அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகள், நிறுவனங்களில் 59 முரண் பாடுகள், உணவு நிறுவனங்களில் 37 முரண்பாடுகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 5 முரண்பாடு கள் என மொத்தம் 101 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என  தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் தா.ஆனந்தன்  தெரிவித்துள்ளார்.

தொகை செலுத்தியவருக்கு  வீடு கட்டிக் கொடுக்காத நிறுவனம்  ரூ.30.28 லட்சம் வழங்க உத்தரவு

தஞ்சாவூர், ஆக.16 -  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே அடுக்கு மாடிக் குடியிருப்பில் உரிய தொகை செலுத்தியவருக்கு வீடு கட்டி கொடுக்காத கட்டுமான நிறுவனம் ரூ.30.28 லட்சம்  வழங்குமாறு தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் எஸ்.கிருஷ்ணன். இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திடம் தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதி சங்கரா புரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 825 சதுர அடியில் வீடு கட்டிக் கொடுக்குமாறு கூறி முன் பணமாக ரூ.5 லட்சமும், பின்னர் 12 மாத தவணைகளில் மாதம் ரூ.2,07,500 வீதம் மொத்தம் ரூ.25,18,63 செலுத்தினார். ஆனால் கட்டுமான நிறுவனம் உரிய நேரத்தில் வீட்டைக் கட்டிக் கொடுக்கவில்லை என தஞ்சாவூர் மாவட்ட  நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கிருஷ்ணன் கடந்த  மே 6 அன்று புகார் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை ஆணையத் தலைவர் த.சேகர், உறுப்பி னர் கே.வேலுமணி விசாரணை நடத்தி, கிருஷ்ணனுக்கு வீடு கட்ட செலுத்தப்பட்ட ரூ.25,18,63-ஐ இறுதி தவணைத்  தொகை செலுத்திய 2023, பிப்ரவரி 15 ஆம் தேதி முதல்,  தொகையைத் திரும்ப ஒப்படைக்கும் தேதி வரை 9 சத வீத வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். நிறுவனத்தின்  சேவை குறைபாடு, தவறான வணிக நடவடிக்கை காரண மாக கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், பொருள் இழப்புக்கும் இழப்பீடாக ரூ.5 லட்சமும், வழக்கு  செலவுத் தொகை ரூ.10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என புதன்கிழமை தீர்ப்பளித்தனர். 

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி திருவையாறு 6 ஆவது வார்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.16 -  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேரூராட்சியில், 6-ஆவது வார்டு மக்களின் அடிப்படை வசதிகளை நிறை வேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேரூராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு நகரக் கிளைச் செயலாளர் விஜய குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, நிர்வாகிகள் எம்.பழனி அய்யா, எம்.ராம், கதிரவன்  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் நகர கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். 6 ஆவது வார்டு மக்கள் வசிக்கும் பகுதியில், மேல வட்டம் வழியாக வரும் பாசன வாய்க்காலைத் தூர்வார  வேண்டும். நகர்ப் பகுதியிலிருந்து வருகிற கழிவுநீர், விவ சாய நிலங்களில் கலப்பதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். 6 ஆவது வார்டு ரேசன் கடையில் நடைபெ றும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் உரிய காலங்களில் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 ஆவது வார்டுக்கு நாள்தோறும் துப்புரவுத் தொழிலாளர்கள் தூய்மைப் பணி  செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.