திருத்துறைப்பூண்டி, ஏப்.18-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்க நிறைவு விழா திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது. சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கரின் 132- ஆவது பிறந்த தினம், போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்க நிறைவு விழா வாலிபர் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
முன்னதாக நடை பெற்ற பேரணியை ஒன்றியக் கவுன்சிலர் கு.வேதரெத்தினம் துவக்கி வைத்தார்.
பேரணிக்கு நகர் செயலாளர் ஜி.தமிழ்மணி தலைமை வகித் தார். மாநிலச் செயலாளர் ஏவி.சிங்காரவேலன், எம்.காமராஜ், பி.பார்த்தீபன், பாரதிமோகன், மணி கண்டன், வருண், ஏகே.வேலவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டிவி.காரல் மார்க்ஸ், நகர் செயலாளர் கோபு உட்பட ஏராளமானோர் பேரணி யில் பங்கேற்றனர்.