மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மத்தியக் குழு உறுப்பினருமான தோழர் சந்திரன்-ராணி ஆகியோரின் மகன் நிருபன்-வெற்றிச்செல்வி திருமணம் திங்களன்று திருச்சி லால்குடி ஸ்ரீதேவி மஹாலில் நடந்தது. விழாவில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், சின்னதுரை, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமதலி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.