திருச்சிராப்பள்ளி, செப்.30 - திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், திருச்சி ராப்பள்ளி மாவட்ட நிர்வாகமும், பபாசியும் இணைந்து 3 ஆவது ஆண்டாக புத்தக திரு விழாவை நடத்தி வருகின்றன. இந்த புத்தக திருவிழா செப்.27 முதல் அக்.6 ஆம் தேதி வரை நடக்கிறது. புத்தக திருவிழாவில் 160 புத்தக அரங்குகளில், 150-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்த கங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரங்கம் 120 மற்றும் 121 இல் பாரதி புத்த காலயம் அமைந்துள்ளது. இங்கு அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளு படியில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பாரதி புத்தகாலயா அரங்கில் ‘தீராக்களம்’ நாவல் வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. விழா விற்கு பாரதி புத்தகாலயம் பொறுப்பாளர் சிவராஜ் தலைமை வகித்தார். நாவலை அருட் தந்தை அமுதன் அடிகள் வெளியிட, அதனை கவிஞர் நந்தலாலா பெற்றுக்கொண்டார். முன்னதாக கவிஞர் கவித்துவன் வரவேற்றார். நாவலாசிரியர், கவிஞர் பாட்டாளி நன்றி கூறி னார்.