districts

img

‘மாதர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்’

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக, வெள்ளியன்று சேலம் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் மாதர் சங்க தலைவர்கள் கையெழுத்து பெற்றனர். மாதர் சங்க மாவட்ட உதவித்தலைவர் கே.ராஜாத்தி, உதவிச்செயலாளர் ஜி.கவிதா, நிர்வாகிகள் எஸ்.வசந்தி, ஆர்.கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.