districts

img

‘பிங்க் அக்டோபர்’ விழிப்புணர்வுப் பேரணி

புதுக்கோட்டை, அக்.31 - மார்பகப் புற்றுநோய் குறித்த ‘பிங்க் அக்டோபர் விழிப்புணர்வுப் பேரணி’ புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளா கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மார்பகப் புற்றுநோயை தடுக்கவும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தை மருத்து வத் துறையினர் ‘பிங்க் அக்டோபர் மாதமாக’ கடைப்பிடித்து வருகின்றனர்.  மேலும், இந்த மாதம் முழுவதும் மார்பக  புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதோடு சிறப்பு  மருத்துவ பரிசோதனைகளையும் மருத்து வர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிங்க் அக்டோபர் விழிப்புணர்வு நிகழ்வு கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் மார்பக  புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. மணி தொடங்கி வைத்தார். பேரணியில் மருத்துவர், செவிலியர் மாணவி கள் 300-க்கும் மேற்பட்டோர் கைகளில் பிங்க் கலர் பலூன்களை ஏந்தி, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.