பெரம்பலூர், ஆக.13 -
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற தலைப்பில் மாபெரும் தூய்மைப் பணி இயக்கத்தை ஆக.12 அன்று ஆட்சியர் க.கற்பகம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ‘நமது சுற்றுப்புறத் தூய்மையை பேணிக் காப்பது நமது கடமை’ என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பின்னர், பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரை பகுதிகளில் சுமார் 75 மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடக்கி வைத்தனர். நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி, பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர், நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.