பெரம்பலூர், ஜூன் 24 -
தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெரம்ப லூர் மாவட்டத்தில் ‘கல்வியும் காவலும்’ என்ற புதிய விழிப்புணர்வு திட்டம் வெள்ளி யன்று துவக்கப்பட்டது.
பெரம்பலூர் ஆத்தூர் சாலையிலுள்ள காவல்நிலையத்தில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ச.ஷ்யாம்ளாதேவி, இத்திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி மாணவிகளிடையே விளக்க உரையாற்றி னார்.
அப்போது அவர் கூறுகையில், “பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘காவல்துறை மக்களின் நண்பன்’ என்பதை உணர்த்து வதற்காகவும் காவல்துறையினரின் அன்றாட செயல்பாடுகள் குறித்து எளிதில் மாணவர் கள் அறிந்து கொள்வதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குற்றம் செய்ப வர்கள் மட்டுமே காவல்நிலையம் வருவார் கள் என்ற அச்சத்தையும் பிம்பத்தையும் மாற்றி மாணவர்களுக்கும் காவல்துறைக் கும் இடையே நல்லுறவை வளர்க்க வேண்டும்.
மாணவர்களிடம் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுகள், சாலை விதிகளை பின்பற் றுதல், ஏரி, குளம், ஆறு போன்றவைகளில் குளிக்கச் செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் எதற்கும் தீர்வாகாது என்பதை விளக்கும் வகை யில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும்.
காவல் நிலைய பதி வேடுகள், தொலைபேசி உதவி எண்கள், காவல் துறையில் செயல்படும் பிரிவுகள், சட்டம் மற்றும் ஒழுங்கு, மாவட்ட ஆயுதப்படை, போக்குவரத்து பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, நாய்ப்படை பிரிவு, விரல்ரேகை பிரிவு, நுண்ணறிவு பிரிவு, சைபர் கிரைம் ஆகிய பிரிவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படும்.
மேலும் கல்வியும் காவலும் திட்டம் தொடர் பாக மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை காவல்துறை சார்பில் நடத்தப் படும். இதன்படி ஒவ்வொரு காவல்நிலையத் திலும் மேற்படி போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாண வர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்” என்றார்.
குன்னம், மங்களமேடு, மருவத்தூர், அரும் பாவூர் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமை யில் இத்திட்டத்தின் துவக்க விழா நடை பெற்றது.