கும்பகோணம், டிச.22 - 141 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்த பாசிச பாஜக மோடி அரசை கண்டித்து தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், நகரச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் கணே சன், மதிமுக மாநில துணைச் பொது செயலா ளர் முருகன், மாநகராட்சி மேயர் சரவணன், திமுக நகர துணை செயலாளர் சசிதரன், விசிக மாவட்டச் செயலாளர் முல்லைவள வன், மாநகர மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்ற னர்.