districts

img

‘ஆத்தூர் தொகுதியில் குடிதண்ணீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது’

சின்னாளபட்டி, ஜன.17- ஆத்தூர் தொகுதியில் திமுக ஆட்சியில் தான் கிராமங்களின் குடிதண்ணீர் பிரச் சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என்று ஆலமரத்துப்பட்டியில் நடைபெற்ற புதிய குடிதண்ணீர் திட்ட திறப்பு விழாவில் ஊரக  வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றி யம் ஆலமரத்துப்பட்டி ஊராட்சி ஊராட்சி யில் கனிம வள நிதி ரூபாய் 20 லட்சம் மதிப்  பில் ரெங்கநாதபுரத்தில் இருந்து குழாய் மூலம் கொண்டு வந்து ஆலமரத்தில் உள்ள  தரைதளம் தொட்டியில் தொட்டியில் நிரப்பி  அதன் மூலம் குடிதண்ணீர் எடுத்து பொது மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற் றது. விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலு வலர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி னார். தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக பொரு ளாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகேஷ்வரி முருகேசன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முரு கேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்  கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்  ஆறுமுகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய துணைச்செயலா ளர்கள் ராஜேந்திரன், வசந்தாமேரி எம்.சி. பாண்டியன், பொருளாளர் ஜாதிக்கவுண் டன்பட்டி கருப்பையா, அவைத்தலைவர் சிவக்குமார், மாணவரணி அமைப்பாளர் அர விந்தன், அரசு ஒப்பந்தகாரர்கள் பஞ்சம் பட்டி ஜீசஸ் அகஸ்டின், மெல்வின்,  பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நிறைவாக ஊராட்சி செயலாளர் தண்ட பாணி நன்றி கூறினார்.