திண்டுக்கல், பிப்.17- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் திண்டுக் கல் மணிக்கூண்டு அருகே வியாழனன்று நடைபெற்ற போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் க.பழனித்துரை துவக்கி வைத்தார். பின்னர் முனைவர் பழனித்துரை பேசுகையில், சந்தை உலகம் நம்மை போ தையில் ஆழ்த்திக் கொண்டி ருக்கிறது. தொழில் நுட்பத் தின் விளைவா அல்லது சந்தையின் விளைவா என்று கண்டுபிடிக்க முடியாத அள விற்கு ஒரு வித்தியாசமான போதை காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. இதி லிருந்து நாம் மீள்வது எப்போது? என்ற சிந்த னையோடு செயல்படுவோ மேயானால் நிச்சயமாக சமூகத்தை மாற்ற முடியும். அதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்துகிற இந்த இயக்கத்தை ஒரு முன்னெடுப்பாக பார்க்கி றேன். அதற்கு என் நெஞ் சார்ந்த நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன் என்று கூறினார். இந்த இயக்கத்திற்கு வாலிபர் சங்க திண்டுக்கல் நகரத்தலைவர் அஜீத்குமார் தலைமை வகித்தார். நகரச்செயலாளர் பிரேம் குமார் வரவேற்று பேசினார். நகர வடக்கு சார்பு ஆய்வா ளர் மனோகரன், முத்தழகு பட்டி மதர்கேர் குடிபோதை சிகிச்சை மைய இயக்குநர் எம்.இருதய ஆண்டனி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.