பழனி, பிப்.18- வனவிலங்குகளால் பயிர்கள் நாச மடைவதை தடுக்க வேண்டும். சேதமடைந்த நெல், மக்காச்சோளம், வாழை, தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நிபந்த னையின்றி வழங்க வேண்டும். விலங்கு களை விரட்டும் விவசாயிகள் மீது வழக்கு பதியக் கூடாது என்று வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பழனி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தொப்பம்பட்டி ஒன்றிய செய லாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். ராமசாமி விளக்கிப் பேசினார். பின்னர் ஆர்டிஓ, தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், கோரிக் கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் பிப்ரவரி 20 திங்கட்கிழமை யன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரு வாய், வனத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயி கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடை பெறும் என்றும் முடிவு செய்யப்பட்டது.