தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் கடந்த 25 ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்காமல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இழுத்தடித்து வருகிறார்கள். இதனால் பழங்குடியின மக்களின் குழந்தைகளின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் காண முடியவில்லை. காட்டுநாயக்கன், பளியர், மலைவேடன் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களின் குழந்தைகள் உட்பட பழனியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.