திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆர்.சச்சிதானந்தம், தமிழ்நாடு இளைஞர் நலன் - விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் நேரில் சந்தித்தார். அப்போது அவரை வரவேற்று உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். திண்டுக்கல் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட தமக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதிக்கு சச்சிதானந்தம் நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பின்போது திமுக துணைப் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் உடனிருந்தனர்.