districts

img

இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி  

வத்தலக்குண்டு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அண்ணாநகரைச் சேர்ந்தவர்கள் மீனாச்சாமி-ஜெயக்கொடி தம்பதி.  இவர்கள் சித்தரேவு பகுதியில் உறவினர் ஒருவரது இறப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மீனாசாமி தனது மனைவியுடன் இன்று காலை சென்று கொண்டிருந்தனர். அப்போது வத்தலக்குண்டு பைபாஸ் அ.பிரிவு பகுதியில் இவர்கள் சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி ரேசன் கடைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மீனாசாமி மற்றும்  அவரது மனைவி ஜெயக்கொடி ஆகிய 2 இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

அதனைதொடர்ந்து சம்பவம் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் விரைந்து உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து நல்லாம்பட்டி வாழைக்காய்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் வீரபாண்டி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;