districts

img

உள்ளடக்கிய கல்வியின் உன்னதம்! மனச்சவால் குழந்தைகளின் மாற்றம்! முன்னேற்றம்!!

திண்டுக்கல்லில் எனக்கு தெரிந்த பெண் அவர். அவருடைய மக னுக்கு பிறந்ததில் இருந்தே மனச்சவால் குறைபாடு, அவனால் தன்னுடைய உடலை கட்டுப்படுத்தி செயலாற்றவும் மற்றவர்களோடு தொடர்புகொள்வதிலும் சிக்கல்கள். அதனால் எப்போதும் வீட்டிலேயே முடங்கி கிடப்பான். பெரும் பாலும் படுக்கைதான். பல சிகிச்சைகள் செய்தும் பெரிய பலனில்லை. பையனின் எதிர்காலம் பற்றியும் இவனை என்ன செய்வது என்பதைப்பற்றியும் வருத்தப்பட்டுக்கொண்டேயிருப்பார். குறைஞ்ச பட்சம்  பேச, நடக்க செஞ்சாக்கூட போதும்ண்ணே, சாமி கும்புட்டாச்சு, டாக்டர்கள பாத்தாச்சு, ஒன்னும் நடக்கல என விசனப்படுவார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதெல்லாம். அப்போது பையனை சிறப்புப் பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்திக் கொண்டிருந்தேன். அவர் லோயர் மிடில்கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பிரத்யேகமான பள்ளி களுக்கும் அனுப்ப இயலவில்லை. லட்ச  லட்சமா கேக்குறாங்கண்ணே, சரிப்பட்டு வரலண்ணா எவ்ளோ காலம் குடுத்துட்டே இருக்கமுடியும் என்பார். ஒரு சில பொதுப் பள்ளிகளில் சேர்த்தும் பார்த்தார், ஆனால் எதுவும் சரிப்பட்டுவரவில்லை என்பதால் வீட்டிலேயேதான் வைத்திருந்தார். அவனுமே எப்போதும் சோகமாகவே அமர்ந்திருப்பான்.

எப்படி நடந்தது மாற்றம்?
சமீபத்தில் சந்தித்த போது பையன் ஓரளவு நிற்கவும் கொஞ்சமா நடக்கவும் தொடங்கி இருந்தான். தட்டுத் தடுமாறி தான் நினைப்பதை சொல்லவும் செய்தான். அவனிடம் தெரிந்த மாற்றம் ஆச்சர்யமாக இருந்தது. பையனை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டதாக சொன்னார் பைய னின் அம்மா. “திண்டுக்கல்ல இருக்கிற  ஒரு கவர்மென்ட் ஸ்கூல்ல சேர்த்துட் டோம்ண்ணே, நல்லா இம்ப்ரூவ் ஆகிட்டாம்ண்ணே, முன்ன மாரி இல்ல,  டிவி பாக்குறான். பயலுகளோட விளை யாடறான், பாட்டு கூட பாடறான்’’ என்று அவ்வளவு சந்தோஷம், அவர் முகத்தில். அவ்வளவு பெருமிதமும். பையன் பாடிக்காட்டினான்.

எப்படி நடந்தது இந்த மாற்றம்? அரசுப் பள்ளிகளில் உள்ளடக்கிய கல்வி (Inclusive education) என்கிற ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுபற்றி பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. இது ஆட்டிசம், மனச்சவால் மாதிரியான சிக்கல்கள் கொண்ட குழந்தைகளுக்கும் கல்வி அறிவும், சமூகத்தொடர்பும் கிடைப்ப தற்காகவும் தமிழ்நாடு அரசு முன்னெடுத் திருக்கிற முன்னோடியான திட்டம். இதில் இத்தகைய மனச்சவால் நிறைந்த குழந்தை களை கண்டறிந்தும், அவர்களாக முன்வந்து சேரும்போதும், அவர்களை உடனே பள்ளி களில் அனுமதிப்பதில்லை.

ஏன் அப்படி? மனச்சவால் பிரச்சனைகள் நிறைந்த குழந்தைகளை திடீரென்று பள்ளி களில் விடுவதால் பொதுவான குழந்தை களோடு சேர்ந்து படிப்பதும், அவர்களோடு தொடர்பு கொள்வதும் சாத்தியமாவ தில்லை. பல குழந்தைகள் அச்சத்தில் சிக்கிக் கொள்வதும், பள்ளிக்கு போக மறுப்பதும் அதிகமாக இருக்கிறது. அதனாலேயே இந்தக் குழந்தைகளிடம் இடைநிற்றல் விகிதம் 90 சதவீதம் அளவுக்கு அதிகம்.

பள்ளி ஆயத்த மையம்
அதனால் அரசு இதை சரிசெய்ய, இக்குழந்தைகளுக்கு அட்மிஷன் போட்ட தும் முதலில் பள்ளி ஆயத்த மையங் களுக்கு அனுப்புகிறார்கள். பள்ளி  ஆயத்த மையம் என்கிற ஒன்றையும் மாநிலம் முழுக்க உருவாக்கி இருக் கிறார்கள். அங்கே இந்தக்குழந்தைகளின் பிரச்சனைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி முதலில் அடிப்படையான சிகிச்சை கள், பிஸியோதெரபி, ஸ்பீச் தெரபி மாதிரி யான உதவிகள் செய்கிறார்கள். இதெல் லாம் செய்வதோடு பள்ளிபற்றியும் அங்கே என்ன செய்யவேண்டும் என்பதையும் பொறுமையாக நல்ல மனநல ஆலோச கர்கள் மூலம் கற்றுத்தந்து குழந்தைகளை பொறுமையாக தயார் செய்கிறார்கள். அதற்கு பிறகே பள்ளிகளுக்கு குழந்தை களை அனுப்புகிறார்கள்.

பள்ளிக்கு சென்றபிறகும் குழந்தை களை தொடர்ந்து கண்காணிப்பது, அவர் களுக்கு மருத்துவமுகாம் மூலம் உத விகள் செய்வது என கவனிப்புதொடர்கிறது.

அரசுப் பள்ளி மூலம் ஆச்சர்யம்
திண்டுக்கல் சிறுவனையும் அப்படி தான் ஆயத்த மையத்துக்கு அனுப்பி இருக் கிறார்கள். அவன் அங்கே சென்ற  பிறகு, இப்போது ஓரளவு இம்ப்ரூவ்  ஆகி இருக்கிறான். இதுபோன்ற மனச் சவால்களை குணமாக்கமுடியா விட்டாலும் சமூகத்தோடு தொடர்புகொள்ளவும், அவர் களை எதிர்காலத்துக்கென தயார் செய்ய வும் இந்த அரசுப் பள்ளிகள் உதவுகின்றன.

இதில் பையனின் அம்மா ஒரு விஷயத்தை சொன்னார், “முன்னெல்லாம் அவனுக்கு எல்லாமே நாமேதான் பண்ணி விடணும். இப்ப அவனே சாப்பிடறான், அவனே உடை மாத்திக்க முயற்சி பண்றான். தப்புகள் செய்தாலும் அந்த முனைப்பு இந்த பள்ளி மூலமாக வந்திருக்கு’’ என்றார். பள்ளி களில் மற்ற பையன்கள் எதுவும் தொந்த ரவு பண்ணுகிறார்களா என விசாரித்தேன்.

“நீங்க வேற அவனுக்கு அவங்கதான் பாதுகாப்பு, ஏன்னா ஸ்கூல்ல பசங்களுக்கு நம்ம பையனோட பிரச்சனைகளை முன் னாடியே எடுத்துச் சொல்லி தயார் செஞ்சுட றாங்க. அதனால மத்த பசங்க, இவனை புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்தபடி நடந்துக்கு றாங்க, காலைல ஸ்கூல்லதான் சாப்பாடு, அவனுக்கு அதுகதான் ஊட்டிவிடும்ங்க” என்றார்.

“இவன் டெவலப் ஆகுறத பாக்க அவ்ளோ சந்தோஷமா இருக்குண்ணே, இவன் ஒன்னும் பெரிய படிப்பு படிச்சு சாத னை பண்ணனும்னு இல்ல, அவன் சாப்பா ட்டை அவனே சாப்பிடறான். அதுவே சாத னைதாண்ணே... அதுக்கு மேல அவன் இத்த னை வருஷத்துல இப்பதான் சந்தோஷ மாருக்கான்’’ என்றார். சொல்லும்போதே அவ்வளவு கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

பள்ளி வர முடியாத குழந்தைகளுக்கு...
இந்த திட்டத்தில் இன்னொரு அம்சம், பள்ளிக்கு வரமுடியாத அளவுக்கு மோச மான நிலையில் இருக்கும் குழந்தை களின் வீட்டுக்கே கல்வியை கொண்டு சேர்க் கிறார்கள். தமிழ்நாடு முழுக்க 1.4லட்சம் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுகிறார்கள், இக்குழந்தைகளை தேடித்தேடி அரசே கண்டுபிடித்து கல்வி வழங்குகிறது. மருத்துவமுகாம்களில் இக்குழந்தைகளுக்கு இருக்கிற பிரச்ச னைகள் கண்டறியப்பட்டு, சுகாதாரத் துறை கூட்டணியோடு உபகரணங்கள், அறுவை சிகிச்சை மாதிரியான உதவிகளை அரசே செய்கிறது! போக்குவரத்து வசதிகள் இல்லாதவர்களுக்கும் அதற்கான உதவி களையும் அரசு முன்வந்து செய்துகொடுக் கிறது! இதெல்லாம் கேட்கும்போதே ஆச்சரி யமாகவும் அதிசயமாகவும் இருந்தது!

இப்படி ஒரு திட்டம் இருப்பதும் இப்படி யெல்லாம் விஷயங்கள் நடந்துகொண்டிருப் பதும் பலருக்கும் தெரிந்திருக்காது. பல குழந்தைகளை அதனாலேயே பள்ளி களுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பூட்டி முடக்கி வைத்திருக்கிறார்கள் பல பெற் றோர்கள். உங்களுக்கு அப்படிப்பட்ட குழந்தைகளைத் தெரிந்தால், எந்த வய தாக இருந்தாலும் தயங்காமல் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப பரிந்துரை செய்யுங்கள். இந்த உள்ளடக்கிய கல்வி (INCLUSIVE EDUCATION) திட்டம்  பற்றி சொல்லுங்கள். ஒருபைசா செலவில் லாமல் அரசு அவர்களை பார்த்துக் கொள்ளத் தயாராயிருக்கிறது!

- அதிஷா