சின்னாளபட்டி, ஜூன் 8- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ராமராஜ புரத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தர வின்பேரில் மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார் முயற்சியில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன கலையரங்கத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் மணி கண்டன்,வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டி யன், மட்டப்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்தி ரன், நிலக்கோட்டை பேரூராட்சித் துணைத்தலைவர் எஸ்.பி. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.