திண்டுக்கல், ஜூன் 17- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூ ரில் ஞாயிறன்று தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் துவங்கியது. இவ்வியக்கத்தில் திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், சிபிஎம் மாவட்டச்செயலாளர் பி.செல்வராஜ், தீக்கதிர் பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகி யோர் பங்கேற்றனர்.
உழைக்கும் மக்களின் உன்னத ஏடான தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக ஆக்குவது என்று கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன் 14 ஆம் தேதி சந்தா சேகரிப்பு இயக்கம் திட்டமிட்டபடி துவங்கப்பட்டது.
வேடசந்தூரில் ஞாயிறன்று சுப்பிர மணியன் ஆசிரியர் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் நவீன் கலைநிதி, திவ்யா ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தத்திடம் தீக்கதிர் ஆண்டு சந்தா தொகை ரூ.2 ஆயிரம் வழங்கினர். இதில் மாவட்டச்செயலாளர் பி.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் ஞாயிறன்று பொதுமேலாளர் ஜோ.ராஜ்மோகன் தலைமையில் சந்தா சேகரிப்பு இயக்கம் நடை பெற்றது.20 சந்தாக்கள் சேகரிக்கப் பட்டன. தீக்கதிர் பொறுப்பாளரும் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப் பினருமான டி.முத்துச்சாமி, வேட சந்தூர் ஒன்றியச்செயலாளர் எம்.பெரிய சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கிரு ஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். (ந.நி.)