districts

பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக பயன்படும் கண்வலி விதைகள் அமோக விளைச்சல் அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம், ஜன.13-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்,  இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளி மந்தையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவு கண்வலி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். தற்போது அமோக விளைச்சல் ஏற்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதில் கண்வலி விதை ஈரப்பதத்தை போக்குவதற்காக வெயிலில் ஒரு வாரம் காய வைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்  பப்பட்டு வருகிறது. இந்த கண்வலி விதை மற்றும் கிழங்கு கள் இலைகளிலிருந்து புற்றுநோய், அல்சர், விஷக்கடி, குடற்புழு, வயிற்றுப்புண், மூட்டு வலி, தொழுநோய், சரும வியாதிகளுக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அரு மருந்தாக வெளிநாடுகளில்  தயாரிக்கப்படு கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை  கண்வலி விதை ஒரு கிலோ ரூ.3 ஆயிரம்  வரை விற்பனையானது.  இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் கடந்த சில  ஆண்டுகளாக தொடர்ந்து விலை வீழ்ச்சி யடைந்து வருகிறது. இந்த ஆண்டு  ஒரு  கிலோ ரூ.1200 வரை வியாபாரிகள் கொள்முதல் செய் கின்றனர்.  இதனால் விவ சாயிகளுக்கு கட்டுப் படியான விலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனியார் வியாபாரிகள் ஒன்றுகூடி பேசி  விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கண்  வலி விதைகளை கொள்முதல் செய்கின்ற னர். அதே நேரத்தில் வியாபாரிகள், அதை  மொத்த வியாபாரிகளிடம் அதிக விலைக்கு  விற்பனை செய்கிறார்கள் என்பது குறிப்பி டத்தக்கதாகும்.  இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கண்வலி விதை களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல்  செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;