சின்னாளப்பட்டி,பிப்.10- நிலக்கோட்டை அருகே குல்லிசெட்டியபட்டி வழியாக செல்லும் முல்லை பெரியார் பிரதான பாசன கால்வாயின் மடையை உடைத்து, தனியார் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளரும் ஊராட்சிமன்ற தலைவருமான வைகை பாலன் மீது பொதுபணித்துறையினர் மற்றும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 30-ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித் துறையால் சித்தர்கள்நத்தம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனப்பகுதிக்கு செல்லும் 12-வது கிளைக் கால்வாய் மடையை உடைத்தும், அத்துமீறி தனியார் நிலங்களை ஆக்கிரமித்துள்ளம் குல்லிசெட்டியபட்டி ஊராட்சி மன்றத்தலைவரான வைகை பாலன் தனது தோட்டத்திற்கு சுமார் 500 மீட்டர் தூரம் புதியபாதை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 100 வேலைத்திட்டத்தில் பணியாற் றக்கூடிய 160 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நான்கு நாட்கள் அந்த பாதை அமைக்கும் பணிக்கு பயன் படுத்தியுள்ளார் என்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குல்லிசெட்டியபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கோவன் மற்றும் ஊர் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியா ளர் மகேஸ்வரி,ஆக்கிரமிப்பு இடத்தை நேரடியாக பார்வை யிட்டு பொதுப்பணித்துறையினர் சார்பிலும் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கால்வாய் கரையை ஒட்டியுள்ள தனியார் பட்டா நிலத்தின் உரிமையாளர்களும் தங்கள் நிலங்களை ஆக்கிர மித்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்கள் குறித்து நிலக்கோட்டை காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.